Wednesday 11 July 2012

எங்கு சென்றாய்

எங்கு சென்று தொலைந்தாய் நீ...?
  ...

உன்னைத் தேடித் தேடியே
தலைசுற்றிக்கொண்டிருக்கிறது
இந்த பூமி...

இன்றேனும் வருவாயா...?


வறண்டு கிடக்கிறது என் பூமி
என் வானமெங்கும் கனத்த சுமையுடன்
கால் வலிக்க காத்திருக்கிறது மேகமூடம்.
நானும்தான்  ஒவ்வொருநாளும்
உனக்காக காத்திருக்கிறேன்…
சில நொடியேனும் தழுவிவிட்டுச் செல்லேன்
என் சில்மிஷ்தேன்றலே..!
மேகத்தின் சுமை குறைக்க
இன்றேனும் வருவாயா
வறண்டு கிடக்கிறது என் பூமி…!