Wednesday 6 February 2013

என் காதல் இன்னும் குழந்தை தான்

மௌனமாய் தொடரும் இந்த
நீண்ட பொழுதுகளில்
ஓயாமல் பேசிக் கொண்டுதானிருக்கிறேன்.

கடந்து செல்லும் தேன்றலிடமும்,
எதிர்ப்படும் மரங்களிடமும் - என்
உடனமர்ந்து வாயாடும் நிலவிடமும்!

உன் பார்வைகளின் வீரியம்
இன்னும் பல பூகம்பங்களை
பிரசவிதுக் கொண்டேதானிருக்கிறது
என் ரத்த நாளங்களில்!

ஒரு நொடி முத்தமிட்டு,
மறுநொடி கொலைசெய்யும்
உன் விழிகளை நினைத்தாலே
கொஞ்சம் நடுங்கவே செய்கிறது என்  பெண்மை!

பாவம் என் காதல் இன்னும் குழந்தை தான்.
இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்கள்
கொஞ்சம்  அதிகப்படி தான்...! 

Sunday 20 January 2013

ஏக்கம்.

வெம்மையில் தவித்த
என் தேகம் குளிர்வித்த தென்றலே
எப்படிச்சொல்வேன் கடந்து சென்றுவிட்ட உன்னிடம் ?

என் கேசம் நுழைந்து
சுவாசம் நிறைந்த
என் தென்றலுக்காக
இன்னும் ஏங்கித்தான் நிற்கிறேன் என்று!

உயிருடன் தான் இருக்கிறேன்...

பூமி என் காலடியில் நழுவி
எங்கோ ஓடித்தொலைகிறது.

கண்கள் இருண்டு  - ஏதோ
சூன்யதுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன.

என் புலன்கள் என்னை மீறி
வேலை நிறுத்தம் செய்கின்றன.

எதிரில் நடக்கும் எதுவும் தெரியவில்லை,
உறத்துக்குபிடும் கூப்பிடும் குரல் கூட உட்செல்லவில்லை.

எங்கோ இடித்துக்கொண்டும்
தொடர்ந்து நடக்கிறேன்.
ஜடமாய்!

எதுவும் தோன்றவில்லை...

அறிவில் பரவும் இருளில்,
 கடைசியாய் பார்த்த உன் முகம் மட்டும்
 அருகில் வருவதும்,
 தொலைவில் சென்று புள்ளியாய் மறைவதுமாய்
 என்னை,
 இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது.