Sunday 20 January 2013

உயிருடன் தான் இருக்கிறேன்...

பூமி என் காலடியில் நழுவி
எங்கோ ஓடித்தொலைகிறது.

கண்கள் இருண்டு  - ஏதோ
சூன்யதுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன.

என் புலன்கள் என்னை மீறி
வேலை நிறுத்தம் செய்கின்றன.

எதிரில் நடக்கும் எதுவும் தெரியவில்லை,
உறத்துக்குபிடும் கூப்பிடும் குரல் கூட உட்செல்லவில்லை.

எங்கோ இடித்துக்கொண்டும்
தொடர்ந்து நடக்கிறேன்.
ஜடமாய்!

எதுவும் தோன்றவில்லை...

அறிவில் பரவும் இருளில்,
 கடைசியாய் பார்த்த உன் முகம் மட்டும்
 அருகில் வருவதும்,
 தொலைவில் சென்று புள்ளியாய் மறைவதுமாய்
 என்னை,
 இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது.


1 comment:

  1. அடேங்கப்பா..அருமையான வரிகள்...Specifically
    "அறிவில் பரவும் இருளில்,
    கடைசியாய் பார்த்த உன் முகம் மட்டும்
    அருகில் வருவதும்,
    தொலைவில் சென்று புள்ளியாய் மறைவதுமாய்
    என்னை,
    இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது!!"

    ReplyDelete