Tuesday 12 June 2012

தொல்லைபேசி

எப்பொழுதும் தொலைந்தேகிடக்கும்
என் தொல்லைபேசி
இப்பொழுதெல்லாம்
என் மார்புக்குள் மாட்டிகொண்டு
மூர்சித்தே  கிடக்கிறது
ஒருவேளை நீ அழைத்திருப்பாயோ
என்ற ஏக்கத்தில்தான்
அவ்வப்போது
சுவாசிக்க அனுமதிக்கிறேன் அதை...!

Friday 1 June 2012

அது மழை !

கவிதை ஒன்றும் கடன்காரனில்லை
தவறாமல் வந்து கதவுதட்ட.
விருந்தாளியும் அல்ல
வரவேற்று உபசரிக்க

அது மழை !

சந்தர்பம் வாய்த்துவிட்டால்
ஓயாது கொட்டும் !
அவ்வப்போது யாரும் எதிர்பாராமல்
கோடையிலும் தலைகாட்டும் !

ஆனால்
 சந்தர்ப்பம்தான் 
 இப்படி எப்போதும்
 அசந்தர்ப்பங்களிலேயே சம்பவிக்கிறது...

நீளும் காத்திருப்புகள்...

ஏதேதோ காரணங்களுக்காய்
காத்திருப்புகள்   நீள்கின்றன!

சன்னல் வழித்தெரியும்
தூரத்து கொடிமரத்தில்
வெகுநேரமாய் காத்திருக்கும் காக்கை
யாருக்காக காத்திருக்கிறது ? - இல்லை
யாரேனும் காத்திருக்கமாட்டார்களா
பொறுப்பற்று அமர்ந்திருக்கிறதே
யாருமற்ற கொடி மரத்தில்...

சிந்தனையோடே மின்சாரத்திற்காக
காத்திருக்கிறேன் - அதிகாலை முதல்.
ஒருவழியாய் அந்த நீண்ட பிற்பகலில்
மின்சாரம் வந்தது - அப்படியே
எனக்காக காத்திருக்கும்
மற்றொரு  அலுவளுக்கான அழைப்பும்...!

ஏதேதோ காரணங்களுக்காய்
காத்திருப்புகள்   நீள்கின்றன!