Friday 1 June 2012

அது மழை !

கவிதை ஒன்றும் கடன்காரனில்லை
தவறாமல் வந்து கதவுதட்ட.
விருந்தாளியும் அல்ல
வரவேற்று உபசரிக்க

அது மழை !

சந்தர்பம் வாய்த்துவிட்டால்
ஓயாது கொட்டும் !
அவ்வப்போது யாரும் எதிர்பாராமல்
கோடையிலும் தலைகாட்டும் !

ஆனால்
 சந்தர்ப்பம்தான் 
 இப்படி எப்போதும்
 அசந்தர்ப்பங்களிலேயே சம்பவிக்கிறது...

No comments:

Post a Comment