Wednesday 6 February 2013

என் காதல் இன்னும் குழந்தை தான்

மௌனமாய் தொடரும் இந்த
நீண்ட பொழுதுகளில்
ஓயாமல் பேசிக் கொண்டுதானிருக்கிறேன்.

கடந்து செல்லும் தேன்றலிடமும்,
எதிர்ப்படும் மரங்களிடமும் - என்
உடனமர்ந்து வாயாடும் நிலவிடமும்!

உன் பார்வைகளின் வீரியம்
இன்னும் பல பூகம்பங்களை
பிரசவிதுக் கொண்டேதானிருக்கிறது
என் ரத்த நாளங்களில்!

ஒரு நொடி முத்தமிட்டு,
மறுநொடி கொலைசெய்யும்
உன் விழிகளை நினைத்தாலே
கொஞ்சம் நடுங்கவே செய்கிறது என்  பெண்மை!

பாவம் என் காதல் இன்னும் குழந்தை தான்.
இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்கள்
கொஞ்சம்  அதிகப்படி தான்...!