வானம் உடைந்து
பெரும் மழை பெய்யுமுன்
தூரல் துவங்கி
தேகம் தொடுவதை
தனிமையில்
இலையற்ற மரத்தில் அமர்ந்து
இளைப்பாறிக் கொண்டே ரசிக்கிறது
சின்னஞ்சிறு தேன் சிட்டு ஒன்று.
கார்மேகம்
தன்னுள் கரைத்துக் கொண்டது
அந்த கரிய சிறிய குருவியை.
காதலை தன்னுள் புதைத்து
கண்ணை மூடி காலம் கடக்கும்
தலைவனைப் போலே...
கரைந்து போவதும் இனிமை தான்.
சிட்டுக்குருவியாய் நான்...😍
No comments:
Post a Comment