Wednesday 1 December 2021

மழைக்குருவி

வானம் உடைந்து

பெரும் மழை பெய்யுமுன்

தூரல் துவங்கி

தேகம் தொடுவதை

தனிமையில்

இலையற்ற மரத்தில் அமர்ந்து

இளைப்பாறிக் கொண்டே ரசிக்கிறது 

சின்னஞ்சிறு தேன் சிட்டு ஒன்று. 


கார்மேகம் 

தன்னுள் கரைத்துக் கொண்டது 

அந்த கரிய சிறிய குருவியை.

காதலை தன்னுள் புதைத்து

கண்ணை மூடி காலம் கடக்கும்

தலைவனைப் போலே‌.‌..


கரைந்து போவதும் இனிமை தான்.

சிட்டுக்குருவியாய் நான்...😍

No comments:

Post a Comment