மௌனமாய் தொடரும் இந்த
நீண்ட பொழுதுகளில்
ஓயாமல் பேசிக் கொண்டுதானிருக்கிறேன்.
கடந்து செல்லும் தேன்றலிடமும்,
எதிர்ப்படும் மரங்களிடமும் - என்
உடனமர்ந்து வாயாடும் நிலவிடமும்!
உன் பார்வைகளின் வீரியம்
இன்னும் பல பூகம்பங்களை
பிரசவிதுக் கொண்டேதானிருக்கிறது
என் ரத்த நாளங்களில்!
ஒரு நொடி முத்தமிட்டு,
மறுநொடி கொலைசெய்யும்
உன் விழிகளை நினைத்தாலே
கொஞ்சம் நடுங்கவே செய்கிறது என் பெண்மை!
பாவம் என் காதல் இன்னும் குழந்தை தான்.
இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்கள்
கொஞ்சம் அதிகப்படி தான்...!
நீண்ட பொழுதுகளில்
ஓயாமல் பேசிக் கொண்டுதானிருக்கிறேன்.
கடந்து செல்லும் தேன்றலிடமும்,
எதிர்ப்படும் மரங்களிடமும் - என்
உடனமர்ந்து வாயாடும் நிலவிடமும்!
உன் பார்வைகளின் வீரியம்
இன்னும் பல பூகம்பங்களை
பிரசவிதுக் கொண்டேதானிருக்கிறது
என் ரத்த நாளங்களில்!
ஒரு நொடி முத்தமிட்டு,
மறுநொடி கொலைசெய்யும்
உன் விழிகளை நினைத்தாலே
கொஞ்சம் நடுங்கவே செய்கிறது என் பெண்மை!
பாவம் என் காதல் இன்னும் குழந்தை தான்.
இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்கள்
கொஞ்சம் அதிகப்படி தான்...!
ஓ நீங்க தான் நடுநிசி நாயகியோ?
ReplyDeleteபிறந்த குழந்தை இரவினிலே தான் முழிக்கும்
அது போல தான் உங்கள் காதல் குழந்தையும்..
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
அனுபவப்பூர்வமான வரிகள். தோழியே, சற்று எழுத்துப் பிழைகளை கவனியுங்கள்.இவை படிப்பதற்கு சற்று சிரமம் தருகின்றன.
ReplyDeleteபிரசவிதுக் - பிரசவித்துக்
தேன்றலிடமும்- தென்றலிடமும்.
இறுதிவரிகள் உணர்ச்சிகளின் உச்சம் !!
அருமை!!!
- அன்புடன் ராஜ்
(also please remove the word verification for comments. settings->post&comments->Show word verification "select No". )
உன் பார்வைகளின் வீரியம்
ReplyDeleteஇன்னும் பல பூகம்பங்களை
பிரசவிதுக் கொண்டேதானிருக்கிறது