Tuesday 4 December 2018

குடையும் ஆகிறாய்...

வறண்டு கிடக்கும்
வானத்தின் ஓரத்தில்
திடீரெனத்திரண்ட மேகம்போல்
கணத்தில் தோன்றி
காதல் பொழிகிறாய்!

குளிர் காற்றாய் காதோரம் முத்தமிட்டு
மயிற்கூச்செரிய மந்தகாசம் செய்து
மயங்க வைக்கிறாய்
மின்னல் சிரிப்பில்!

இடியுடன்கூடிய
மழைவரக்கூடுமென
வாநிலை அறிக்கை கூட
எச்சரிக்கை செய்யவில்லை...

எதேட்சையாய்
எங்கிருந்தோ வந்து
என் வானவெளியெங்கும்
நின்று பொழிகிறாய்...

இடியோசை இன்னிசை பாட
திடீரென கொட்டித்
தித்திக்கும் மழையில்
நான் திக்குமுக்காட
சிறகு விரித்து சேய்பேனும்
சிட்டுக்குருவியாய் - எனை
கட்டிக்கொண்டு கதகதப்பூட்டி
குடையும் ஆகிறாய்...


No comments:

Post a Comment