சமையலறை சன்னல் வழியே
வானம் பார்த்து மழை ரசிப்பதே
பெரும்பேறாய் இருக்கிறது
இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு..
மழையே அவளானபோதும்
ஏனோ நனையாமலே ஏங்குகிறாள்...
குடைக்குள் மட்டுமே பெய்துகொண்டிருக்கும்
இந்த குட்டி குட்டி மழை மேகங்கள்
விஷ்வரூபமெடுத்தால் -குடைகள்
காற்றோடு போகுமெனத்தெரிந்திருந்தும்
குறுகியே பெய்கிறது மழை
வானம்போல் வரிந்தே நிற்கிறது குடை...
வானம் பார்த்து மழை ரசிப்பதே
பெரும்பேறாய் இருக்கிறது
இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு..
மழையே அவளானபோதும்
ஏனோ நனையாமலே ஏங்குகிறாள்...
குடைக்குள் மட்டுமே பெய்துகொண்டிருக்கும்
இந்த குட்டி குட்டி மழை மேகங்கள்
விஷ்வரூபமெடுத்தால் -குடைகள்
காற்றோடு போகுமெனத்தெரிந்திருந்தும்
குறுகியே பெய்கிறது மழை
வானம்போல் வரிந்தே நிற்கிறது குடை...
No comments:
Post a Comment