Tuesday 4 December 2018

திறந்து கிடக்கும் சன்னல்...

ஒவ்வொரு மழை நாளையும்
ஒருவாறு கடந்து போகிறேன்
நீயின்றி - நினைவுகளுடன்!

அடித்துப் பெய்கையில்
உன் காதலையும்
தூரல் போடுகையில் உன்
காமத்தையும் - மேகம் கணத்து
பெய்யாது நிற்கையில்
உன் கோபத்தையும் நினைவூட்டும்
இந்த மழைகாலத்தில் மட்டுமேனும்
வந்துபோயேன்!

ஒரு சிறகில் சினமும்
மறுசிறகில் சினேகமும்
சுமந்து திரியும் மழைக்குருவியே
உனக்காக திறந்தே
கிடக்கின்றன என் சன்னல்கள்!

No comments:

Post a Comment