ஒவ்வொரு மழை நாளையும்
ஒருவாறு கடந்து போகிறேன்
நீயின்றி - நினைவுகளுடன்!
அடித்துப் பெய்கையில்
உன் காதலையும்
தூரல் போடுகையில் உன்
காமத்தையும் - மேகம் கணத்து
பெய்யாது நிற்கையில்
உன் கோபத்தையும் நினைவூட்டும்
இந்த மழைகாலத்தில் மட்டுமேனும்
வந்துபோயேன்!
ஒரு சிறகில் சினமும்
மறுசிறகில் சினேகமும்
சுமந்து திரியும் மழைக்குருவியே
உனக்காக திறந்தே
கிடக்கின்றன என் சன்னல்கள்!
ஒருவாறு கடந்து போகிறேன்
நீயின்றி - நினைவுகளுடன்!
அடித்துப் பெய்கையில்
உன் காதலையும்
தூரல் போடுகையில் உன்
காமத்தையும் - மேகம் கணத்து
பெய்யாது நிற்கையில்
உன் கோபத்தையும் நினைவூட்டும்
இந்த மழைகாலத்தில் மட்டுமேனும்
வந்துபோயேன்!
ஒரு சிறகில் சினமும்
மறுசிறகில் சினேகமும்
சுமந்து திரியும் மழைக்குருவியே
உனக்காக திறந்தே
கிடக்கின்றன என் சன்னல்கள்!
No comments:
Post a Comment