Wednesday 9 May 2012

என் கவிதைகளுக்கு லாபம்!

உன் கடைக்கண் பார்வைகளும்
என்னுடனான மௌன சம்பாஷனைகளும்
சிலிர்ப்பை உள்ளே ஊற்றெடுக்கச் செய்தாலும்,
ஏனோ விலகிசெல்லவே விரும்புகிறேன்
என் பந்தமற்ற பரவசமே...! 

உன் அலையும் கண்களில்
அவ்வப்போது காமம் கண்டாலும்,
உறவாகமுடியாத உனை
உச்சிமுகரவே உளம் விரும்புவதேன்
என் காலம் கடந்த காதலே...?

உண்ணும் போதும் உடுதும்போதும்
உன் நினைவு வந்தாலும்
உரங்கும்போது  மட்டும்
உனக்கான கவிதைகள் வந்தெனை
வதம் செய்வதேன்...?

எது எப்படியோ உன்னால்
என் கவிதைகளுக்கு லாபம்...! 

No comments:

Post a Comment