Wednesday 9 May 2012

ஒரு யுகக் கோபம்

இனி உன்னுடன்
பேசுவதாய் இல்லை போ!
ஒரு யுகக் கோபம்
உன் மேல் எனக்கு...

விடைபெறும் தருணங்களில்
விவரிக்க முடியாது போனாலும்
விழி பார்த்து துயர் தீர்க்க
தோன்றாது போனதேன்.?

நீ இருப்பதற்கான தடயங்கள் தேடி
இல்லாத ஏக்கத்தில்,
வெகு நேரம் நின்றுகொண்டிருந்தேன்
நீ சென்ற பாதையில்!

இனி ஒருபோதும்,
விலகும்போது விடைபெராது போய்விடாதே
வீணாய் புலம்புகிறது மனம்...

போகட்டும் விடு.!
நான் தான் உன்னுடன் பேசுவதில்லையே-
உன் மேல் எனக்கு
ஒரு யுகக் கோபம்...

No comments:

Post a Comment