Thursday 10 May 2012

பூகம்பம்!

உன் பார்வை வட்டத்திற்குள்
பறந்து திரிந்து - சத்தமின்றி
உன் தோட்டத்துப் பூக்களை
காதலாய் முகர்ந்து,

போகிற போக்கில் உன்
சட்டையில் மோதி
வண்ணம் உதிர்த்துச் சென்ற
வண்ணத்துப் பூச்சியல்ல நான்.

ஓசைகளுடன் உன் தேசம் நுழைந்த
பூகம்பம் நான் ! - என்னால்
உனக்குள் ஏராள மாறுதல்கள்!

இல்லையென்று பொய்யுரைக்காதே
உன் விழிகளில் தெரிகிறது
விளைவுகளின் அளவுகோல்.

என்னால்  உன் நிலப்பரப்புகள் மாறிப்போயின
நீர்நிலைகள் கூடிப்போயின! - ஆம்
பட்டம்பூசியல்ல- நான் பூகம்பம்!

என் பாதிப்புகள் இறுதிவரையில்
இருக்கும் உன்னுடன்...

No comments:

Post a Comment