ஏனிப்படி தித்திக்கும் விஷத்தை
தேடிக் குடிக்கிறாய்...
சிலிர்க்கும் மின்சாரத்தை
மகிழ்ந்து தொடுகிறாய்...
வேடிக்கையாய் பேசியே
நேசிக்கவும் வைத்துவிட்டாய் என்னை!
இருப்பினும்
இதோ மீண்டுமோர் எச்சரிக்கை -
நான் உன் தலைகோதும் தென்றலல்ல
உன் வேர் அசைக்கும் புயல்...
என் வேகம் தெரிந்து காதல் செய்!
நான் காமக் குழந்தை.
ஆனால் காதல் ராட்சஷி ...
உன்னை கண்ணிமை முதல்
கால் நகம் வரை
காதலித்தே கொன்றுவிடுவேன்
கவனமாய் இரு...
என்னால் உன் நாட்களின் நீளம் குறைந்துபோகும்.
சுற்றம் மறக்கும் - சுகம் கூடும்
நாளொன்று போக வயதொன்று குறையும்!
பருவநிலை நிலைத்து
உன் பாதையெங்கும் பூப்பொழியும்.
காதில் விழுவதெல்லாம் கவிதையாகும்,
கண்ணில் பட்டதெல்லாம் கலையாகும்.
உணவு பிடிக்கும் உறக்கம் சுகிக்கும்
கனவு பிறக்கும் காதல் சுரக்கும்
இறக்கையும் முளைக்கும்.
இதயம் மட்டும் தவிக்கும்...
சுருங்கச்சொன்னால் சொர்க்கத்தில் இருப்பாய்...
எனைச் சற்றே விலகினாலும் செத்துப்போவாய்!
நொடிதோறும் காதலிக்கப் படுவாய்...
எனைப் பிரிகையில் நொடிகூட யுகமாய் உணர்வாய் !
ஒன்றை மட்டும் நினைவில் வை.
காதல் கண்ணாமூச்சியில்
எப்போதும் நானே வெல்வேன்
பரிசு மட்டும் நீ பெறுவாய்!
தீண்டத் துடித்து தோற்ப்பாய்
தேகம் குளிரச் சூடாவாய்.!
முடிவில் மோகம் முற்றிச் சாவாய்
பின் என் காதல் தின்று மீள்வாய்!
வேடிக்கை என்னவென்றால்
வேண்டாம் இந்த இம்சை என்று
விலகிப்போக நினைத்து
மீண்டும் முதலிலிருந்து துவங்குவாய்...
கடைசியாய் காதலுக்குப் பழகிப்போவாய்...
தவறினால் தவித்துப்போவாய்...
இவையெல்லாம் உனக்குச்
சம்மதமென்றால் நீ தொடரலாம்...
தீராத காதல் உண்டு என்னிடம்...!
நான் காதல் ராட்சஷி...
தேடிக் குடிக்கிறாய்...
சிலிர்க்கும் மின்சாரத்தை
மகிழ்ந்து தொடுகிறாய்...
வேடிக்கையாய் பேசியே
நேசிக்கவும் வைத்துவிட்டாய் என்னை!
இருப்பினும்
இதோ மீண்டுமோர் எச்சரிக்கை -
நான் உன் தலைகோதும் தென்றலல்ல
உன் வேர் அசைக்கும் புயல்...
என் வேகம் தெரிந்து காதல் செய்!
நான் காமக் குழந்தை.
ஆனால் காதல் ராட்சஷி ...
உன்னை கண்ணிமை முதல்
கால் நகம் வரை
காதலித்தே கொன்றுவிடுவேன்
கவனமாய் இரு...
என்னால் உன் நாட்களின் நீளம் குறைந்துபோகும்.
சுற்றம் மறக்கும் - சுகம் கூடும்
நாளொன்று போக வயதொன்று குறையும்!
பருவநிலை நிலைத்து
உன் பாதையெங்கும் பூப்பொழியும்.
காதில் விழுவதெல்லாம் கவிதையாகும்,
கண்ணில் பட்டதெல்லாம் கலையாகும்.
உணவு பிடிக்கும் உறக்கம் சுகிக்கும்
கனவு பிறக்கும் காதல் சுரக்கும்
இறக்கையும் முளைக்கும்.
இதயம் மட்டும் தவிக்கும்...
சுருங்கச்சொன்னால் சொர்க்கத்தில் இருப்பாய்...
எனைச் சற்றே விலகினாலும் செத்துப்போவாய்!
நொடிதோறும் காதலிக்கப் படுவாய்...
எனைப் பிரிகையில் நொடிகூட யுகமாய் உணர்வாய் !
ஒன்றை மட்டும் நினைவில் வை.
காதல் கண்ணாமூச்சியில்
எப்போதும் நானே வெல்வேன்
பரிசு மட்டும் நீ பெறுவாய்!
தீண்டத் துடித்து தோற்ப்பாய்
தேகம் குளிரச் சூடாவாய்.!
முடிவில் மோகம் முற்றிச் சாவாய்
பின் என் காதல் தின்று மீள்வாய்!
வேடிக்கை என்னவென்றால்
வேண்டாம் இந்த இம்சை என்று
விலகிப்போக நினைத்து
மீண்டும் முதலிலிருந்து துவங்குவாய்...
கடைசியாய் காதலுக்குப் பழகிப்போவாய்...
தவறினால் தவித்துப்போவாய்...
இவையெல்லாம் உனக்குச்
சம்மதமென்றால் நீ தொடரலாம்...
தீராத காதல் உண்டு என்னிடம்...!
நான் காதல் ராட்சஷி...
No comments:
Post a Comment