Monday 14 May 2012

காதலின் அடுத்த கட்டம்

ஓராயிரம் அலுவலுக்கும்
ஓயாது உன்னை வட்டமிடும்
நண்பர்களுக்கும் மத்தியிலும்,
அடிக்கடி எனைத்தேடும்
உன் விழியன் வேகத்தையும்
நான் பார்த்துவிட்டால் பூக்கும்
அந்த மந்தகாசப் புன்னகையும் கண்டு
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது

என் அருகாமையின் தேவை
அதிகரித்துப்போனது உனக்கு...!

நானின்றி நாட்கள் நீள்வதும்
அருகிருக்கும் தருணங்கள்
புயலாய் கடப்பதுமென
காதலுக்கே உரிய மாயாஜாலங்கள்
மெல்ல மெல்ல ரகசியமாய்
அரங்கேறத் துவங்கிவிட்டன.

அடுத்து நிகழ்வதரிய ஆவலா...
அப்படியெனில் என் அருகே வந்து
வேறேதும் பேசாது மெதுவாய் கண்மூடி
மூச்சை ஆழமாய் இழுத்துவிடு...

கண்களை திறக்கையில்
காதலின் அடுத்த கட்டம்
கண்முன்னே தெரியும்...!

1 comment:

  1. Amazing lines thoori...i wish you all the best to became a best poet...

    ReplyDelete