Thursday 24 May 2012

நீ இன்றி அமையாது என் உலகம்....!

நீ கவிதையா  இல்லை காதலா 
இல்லை இல்லை ,
இவை இரண்டுக்கும் இடைப்பட்ட
ஏதோ ஒரு இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாய் நீ!

கொஞ்சம் வாசிக்கிறேன்
கொஞ்சம் நேசிக்கிறேன்.!

நீ ஒளியா இல்லை இருளா
இல்லை இல்லை
நான் இருள் நீ ஒளி.
இரு துருவங்களானாலும் அன்பே,
சிலநிமிடங்கள்
நாம் சந்தித்து, நேசம் பகிர்ந்து
விடைபெறும் பொழுதுகள்...
அழகான மாலை வேளைகள் !

சிலநிமிடங்களே நிகழ்ந்தாலும்
இது நிரந்தரம்!
என் சூரியனே,
அஸ்தமிக்கும் போது
இன்னும் அழகாய் இருக்கிறாய் நீ
நானும் விடைகொடுக்கிறேன்
ஒவ்வொருமுறையும்,
நாளை வருவாய் - என்ற நம்பிக்கையில் !

தவறாமல் வந்துவிடு...
"நீ இன்றி அமையாது என் உலகம்!"

No comments:

Post a Comment