Tuesday 8 May 2012

ஆசை...

ஏதேனும்  ஒரு கொட்டும் மழை நாளில்,
கண்ணாடிச் சுவர்களுக்குபின்
எதிரெதிரில் அமர்ந்து,
ஒருகோப்பை தேநீரை,
வெகுநேரம் குடிக்கின்ற சாக்கில்
உன் வாசத்தை நாசியில் நிரப்பிக்கொண்டு
சலனம் ஏதும் காட்டமல்
உன் கண்களை உற்றுப் பார்த்தபடி

உன் குறும்புகள் அனைத்தையும்
ரகசியமாய்  ரசித்துவிட்டு
சற்றே மழை விட்டதும்
ஒன்றுமே நடவாதது போல்
சட்டென கைகுலுக்கி விடைபெற்று
மெல்லிய சாரலில் மட்டுமல்ல
உன் சிலிர்ப்பூட்டும் நினைவிலும் நனைந்தபடி
வெகுதூரம் பயணிக்க ஆசை...

மழை வரும் மற்றொரு நாளில் வருவாயா ..?
கனவுகளோடு காத்திருக்கிறேன்!

1 comment:

  1. நீ வரும்போது,நான் நனைவேனா!!

    நல்ல வரிகள்..வாழ்த்துகள்! நிறைய எழுதுங்கள்..இந்த வாசகனுக்காக..

    ReplyDelete